பிரபல இயக்குனர் கெளதம்மேனன் தற்போது
சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது
மடமையடா' மற்றும் தனுஷ் நடித்து வரும் 'எனை
நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை ஒரே
நேரத்தில் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் படத்தில் அவர்
வில்லனாக நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு
முன்னர் தகவல் வந்தது. ஆனால் தற்போது
இரு படங்களின் பணிகளில் அவர் பிசியாக
இருப்பதால் தனுஷ் படத்தின் வில்லன்
கேரக்டரில் நடிக்கும் முடிவை கைவிட்டுள்ளதாக
தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருக்கு பதில்
வேறொரு நடிகர் அந்த கேரக்டரில்
நடிக்கவுள்ளார்.
தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில்
தனுஷ் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில்
நடிக்கவுள்ளதாகவும், இதில் ஒரு கெட்டப்பின்
படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னொரு
கெட்டப்பின் படப்பிடிப்பு விரைவில்
தொடங்கவுள்ளதாக படக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment