Monday 23 May 2016

ஏ.எல்.விஜய்யுடன் முதல்முறையாக இணையும் ஜெயம் ரவி


மதராசபட்டிணம், தாண்டவம், தலைவா, இது
என்ன மாயம் உள்பட பல வெற்றி படங்களை
கொடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்
முதன்முதலாக ஜெயம் ரவியுடன் இணைகிறார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்
நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு
தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஜெயம் ரவி
கூறியதாவது: இயக்குனர் ஏ.எல்.விஜய்யின்
ஸ்டைலும் எனது நடிப்பும் மிகப்பொருத்தமாக
இருக்கும் என நான் பலமுறை கருதியதுண்டு.
ஆனால் இருவரும் இணைய காலநேரம் இதுவரை
ஒன்றிணைந்து வரவில்லை. தற்போது இருவரும்
இணையும் காலம் வந்துள்ளதால் இதை மிஸ்
செய்ய இருவருமே விரும்பவில்லை' என்று
கூறியுள்ளர்.
ஆக்சன் மற்றும் எமோஷனல் படமாக
உருவாகவுள்ள இந்த படம் குறித்த மற்ற
தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது. ஜெயம்
ரவி தற்போது 'போகன்' என்ற படத்தில் நடித்து
வருகிறார். ஏற்கனவே ஜெயம் ரவியை இயக்க
கவுதம் மேனன், மோகன் ராஜா, சுசீந்திரன், சக்தி
செளந்திரராஜன் ஆகியோர் தயார் நிலையில்
இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள்
வரிசையில் தற்போது ஏ.எல்.விஜய்யும்
இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...