Sunday 15 May 2016

தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு தேதி அறிவிப்பு


தனுஷ் நடிப்பில் ‘தொடரி’
மற்றும் ‘கொடி’ ஆகிய இரண்டு
படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது
ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தனுஷ் தற்போது கவுதம் மேனன்
இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும்
தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக
நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்தவுடன் கார்த்திக்
சுப்புராஜின் இயக்கத்தில் நடிப்பார்
என கூறப்பட்டது. இதனால்
வெற்றிமாறன் இயக்கத்தில்
தனுஷ் நடிக்க இருக்கும் ‘வட
சென்னை’ படம் அடுத்த வருடம்
தொடங்கும் என செய்தி
வெளியானது. ஆனால் தற்போது
இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
தகவல் வந்துள்ளது.
‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பை
வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல்
தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்த பிறகுதான்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்
தனுஷ் நடிக்க இருக்கிறார்.
‘வடசென்னை’ படத்தில் தனுஷூக்கு
ஜோடியாக சமந்தா மற்றும்
ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார்கள்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்
நிறுவனம் தயாரிக்கவுள்ள
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...