Sunday 11 June 2017

கத்தி ஸ்டைலில் விவசாயிகள் பிரச்சனை பற்றி விஜய் இன்று சொன்ன அதிரடி கருத்து

விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பிரச்சனை, கடன் தொல்லை என விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அது பற்றி விஜய் கத்தி என்ற படத்தின் கிளைமாக்ஸில் பேசியிருப்பார். அது போல அவர் இன்று நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார்.

அவர் பேசியபோது "நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும்."

"விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும். 3 வேலை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது" என பேசியுள்ளார்

நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...