சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய 100வது நாடகத்தின் சிறப்பு விருந்தினராக வந்தார், இவருடன் சதீஷ், இயக்குனர் பாக்யராஜ், தம்பி ராமையா என பலரும் வந்திருந்தனர்.
நாடகம் முடிந்து சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘சினிமாவில் இன்று பலபேர் கொடிக்கட்டி பறக்க நாடகம் தான் முக்கிய காரணம், ஏனெனில் பலரும் இங்கிருந்து வந்தவர்கள் தான்.
அவர்கள் பக்கத்தில் அமரவே எனக்கு வெட்கமாக உள்ளது’ என அவர் கூறினார்.
No comments:
Post a Comment