தமிழ் சினிமாவில்
மதராசப்பட்டினம் படத்தின் மூலம்
அறிமுகமானவர் எமி
ஜாக்சன்.அடுத்ததாக விக்ரம் நடித்த
தாண்டவம் படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படத்தையும்
ஏ.எல்.விஜய் தான்
இயக்கியிருந்தார்.இதன்பின்னர்
எமி ஜாக்சன் ஐ, தெறி, 2.0 போன்ற
பிரமாண்ட படங்களில் நடிக்க
ஆரம்பித்துவிட்டார்.
தற்போது மூன்றாவது
முறையாக மீண்டும்
ஏ.எல்.விஜய்யுடன்
இணைந்துள்ளார். பிரபுதேவா,
தமன்னாவை வைத்து தற்போது
காந்தா என்ற படத்தை விஜய்
இயக்கி வருகிறார்.
இப்படத்தில் தான் எமி முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளாராம். இதில்
பிரபுதேவாவுடன் ஒரு
பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.
இதை தன் டிவிட்டர் பக்கத்திலும்
பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment