தமிழ் சினிமாவில் முன்னணி
நடிகையாக வலம் வருபவர் திரிஷா.
இவர் தற்போது ‘நாயகி’ என்னும் படத்தில்
நடித்து வருகிறார். இதில் முதல்
முறையாக வித்தியாசமான இரட்டை
வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி
வருகிறது. கணேஷ் வெங்கட்ராமன்
முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை
திரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்து
வருகிறார். கோவி இயக்கி வருகிறார்.
இப்படத்தை அடுத்து விஜய்யை வைத்து ‘மதுர’
படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில்
திரிஷா நடிக்க இருக்கிறார். இதிலும்
திரிஷா இரண்டு வேடங்களில் நடிக்க
இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து
இரண்டு படங்களில் இரட்டை வேடத்தில்
நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
இப்படங்களை தவிர, விஜய் சேதுபதியுடன்
‘காத்துவாக்குல இரண்டு காதல்’
படத்திலும் நடிக்க இருப்பதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment