ரஜினி முருகன் வெற்றிக்குப்பிறகு
தமிழ் திரை உலகில் முக்கிய இடம்
பிடித்திருப்பவர் கீர்த்திசுரேஷ். இரண்டு
படங்களில் நடிப்பதற்குள் விஜய், தனுஷ்
ஆகியோருடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது
எப்படி? என்பது குறித்து கீர்த்தி சுரேசிடம்
கேட்ட போது….
“எல்லாம் கடவுள் செயல். நாளை
என்ன நடக்கும் என்று யோசிக்க மாட்டேன்.
இன்று என்ன செய்ய முடியுமோ அதை
நன்றாக செய்ய நினைப்பேன்.
‘ரஜினி முருகன்’ என் திரையுலக வாழ்வில்
மிகவும் முக்கியமான படம். கேரளாவில்
கூட இந்த படம் மிகவும் பேசப்பட்டது.
விஜய், தனுஷ் படங்களில் நடிக்க எனக்கு
வாய்ப்பு கிடைத்தது பற்றி எனக்கு நானே
பெருமைப்பட்டுக் கொள்ள
முடியாது. மலேசியாவில் இயக்குனர்
பிரபுசாலமன் என்னை சந்தித்தார்.
அப்போது தனுஷ் ஜோடியாக
தொடரி படத்தில் நடிக்க
முடியுமா என்று கேட்டார். மிகவும்
மகிழ்ச்சி அடைந்தேன். அந்த படப்பிடிப்பு
திட்டமிட்ட காலத்தில் முடிவடைந்து விட்டது.
நிச்சயம் அது வெற்றிப்படமாக
அமையும்.
விஜய் சாருடனும் நடிக்கவும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. இந்த படப்பிடிப்பு
தொடங்கி விட்டது. இதில் நான்
நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக
இருக்கின்றன.
இந்த வாய்ப்புகள் அனைத்தையும் கடவுள்
கொடுத்ததாகவே நினைக்கிறேன்.
எனது அம்மா சொன்னபடி
நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும்
மரியாதை கொடுக்கிறேன். கதை
கேட்டு அம்மாவிடம் சொல்வேன்
என்றாலும், எனக்கு பிடித்த கதையில் நீ
நடி என்று தான் அம்மா
சொல்லுவார்.
நான் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக
கூறுவது தவறு. ஏற்கனவே வாங்கிய
சம்பளத்தை விட குறையாமல்
தயாரிப்பாளருக்கும் எனக்கும் திருப்தி
அளிக்கும் வகையில் தான் சம்பளம்
வாங்குகிறேன்.
என் அம்மா தமிழ், அப்பா
மலையாளம், நான் வளர்ந்த இடம்
கேரளா, தமிழகம் வாழவைக்கும் இடம்.
கேரளாவை விட எனக்கு சென்னையில்
தான் நண்பர்கள் அதிகம். தமிழ்
சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க
வேண்டும் என்பது என்
விருப்பம்”என்றார்.
No comments:
Post a Comment