நடிகை சமந்தாவுக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் நான்கே மாதத்தில் நான்கு தமிழ்படங்களில் நடிக்க உள்ளார்.
சமந்தா தற்போது விஜய் 61, அநீதி கதைகள் , இரும்பு திரை ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார். இவர் திருமணம் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதால் இந்த நான்கு படங்களையும் திருமணத்திற்கு முன்பே நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.இதற்கான பணிகளில் அவர் தற்போது இறங்கியுள்ளார். நான்கு தமிழ்ப்படங்களிலும் விரைவாக நடித்து முடித்து விட்டு தனது திருமணத்தை எந்தவித டென்சனும் இல்லாமல் ஜாலியாக கொண்டாட இருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தா வும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் நாக சைத்தன்யா வீட்டு முறைப்படியும், சமந்தா வீட்டு முறைப்படியும் நடக்கும் என இருவரும் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment