Sunday 18 June 2017

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது.

செய்திகளும், புகைப்படங்கImage result for nithiyana sex appelளும் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தன. நாடோடி தென்றல் படம் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பின் வாய்ப்பில்லாமல் போனது.
ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து பின் சில ஆண்டுகளில் பிரிந்தார். பின் சமீபத்தில் சன்யாசம் வாங்கிய ரஞ்சிதா தன் பெயரை ஆனந்த மயி என்று மாற்றிக்கொண்டு தலைமை சேவகராக ஆஸ்ரமத்தில் இருக்கிறாராம்.

எப்பா, விக்கி இப்பயாச்சும் நல்ல வார்த்தை சொன்னீகளே: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி Read more at: http://tamil.filmibeat.com/news/vignesh-shivan-finally-gives-update-about-tsk-046879.html

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். படத்தை துவங்கிய பிறகு அது குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் விக்கி. படம் பற்றி ஏதாவது சொல்வீர்களா, இல்லையா என்று சூர்யா ரசிகர்கள் விக்கியை கலாய்த்து மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் விக்கி நல்ல செய்தி தெரிவித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தந்தை-மகன் உறவு குறித்து காண்பிக்கப்படும். தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் - ஜூலை முதல் வாரம் #TSKUpdates #AnbaanaSuriyaFans என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
Image result for vignesh shivan

ரசிகர்கள் விக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டும் அவர் பேச்சை நம்ப சூர்யா ரசிகர்கள் சிலர் தயாராக இல்லை.

டேட் நன்றி ப்ரோ, ஃபைனல் டேட் தான என்று விக்னேஷ் சிவனிடம் ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

து என்ன? இந்த ஃபர்ஸ்ட் வீக் லாஸ்ட் வீக் வேண்டாம் தேதியை சொல்லுங்க என்று சூர்யா ரசிகர் ஒருவர் விக்கி மீது நம்பிக்கை இல்லாததை வெளிப்படுத்தியுள்ளார்.

தலைசுற்ற விடும் கீர்த்தி சுரேஷ்! எரிச்சலில் முன்னணி ஹீரோக்கள் !

நடிப்பும் அழகும் நல்லா அமைஞ்சாலும், அதிர்ஷ்டமில்லேன்னா அதிரசம் சுடுற வேலை கூட கிடைக்காது சிலருக்கு! ஆனால் அழகுக்கும் நடிப்புக்கும் இணையாக அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வரவு மேல வரவு வந்தால், உறவாவது? நட்பாவது? என்ற எண்ணம் வருமல்லவா? அது வந்திருச்சோ… என்ற கவலையில்தான் இப்போது தள்ளாடுகிறது தமிழ்சினிமா. ஏன்? கீர்த்தியின் கித்தாப்பு அப்படி!

தொடர்ந்து தமிழில் நடித்துக் Image result for keerthiகொண்டிருந்தவருக்கு அந்தந்த படங்களும் ஹிட்டடித்ததால் டாப் நடிகைகள் வரிசைக்குள் வந்துவிட்டார். அந்த பொல்லத இடம் தந்த கவுரவத்தால், விஜய்யையே சமயங்களில் எரிச்சலூட்டி வந்தாராம் கீர்த்தி. பைரவா பட சமயங்களில் பலமுறை விஜய் மேக்கப்புடன் வந்து காத்திருக்க, சுமார் ஒரு மணி நேர தாமதமாக கூட அவர் வந்திருக்கிறாராம். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட விஜய்க்கு, அப்படத்தின் பிரமோஷன் சமயத்தில் கீர்த்தி காட்டிய பந்தாவை பொறுக்கவே முடியவில்லை. இனிமேல் அவர் விஜய்யுடன் நடிப்பாரா என்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. போகட்டும்… நாம் சொல்ல வருவது வேறு.
கடந்த பத்து நாட்களாக தனது செல்போன் எண்ணை யாருக்கும் சொல்லாமல் மாற்றிவிட்டாராம் கீர்த்தி. முன்னணி மேனேஜர்களும், பிரபல ஹீரோக்களும் கீர்த்தியை தொடர்பு கொள்ள பழைய நம்பரில் தொடர்பு கொண்டால், எதிர்முனையில் கொர்… என்ற குறட்டை சப்தம் கூட வருவதில்லை. தேடிப்பிடித்து கீர்த்தியின் அம்மாவுக்கு போன் அடித்தால், ஆதார் எண்ணில் ஆரம்பித்து பிளட் குரூப் வரை விபரம் கேட்பதால், பலரும் பேசவே அஞ்சுகிறார்கள்.
என்னம்மா சொல்லாம கொள்ளாம நம்பரை மாத்திட்டீங்களே…? என்று கேட்டால், “என் பொண்ணு பழைய மாதிரின்னு நினைச்சீங்களா? அவ நடிச்சு தெலுங்குல இரண்டு படம் அடுத்தடுத்து ஹிட். தமிழ் படமே வேணாம்னு முடிவெடுத்துட்டோம்னா உங்க கதி என்னான்னு யோசிச்சு பாருங்க” என்றெல்லாம் மம்மி சவுண்ட் விடுவதால், கோடம்பாக்கமே படு அப்செட்!
திருக்கழுக்குன்றம் இல்லேன்னா ஒரு திருப்பரங்குன்றம்… போங்கம்மா போங்க!

Friday 16 June 2017

விவேகம்’ படத்தில் அஜித் சாதனை பாடல்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.
இதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ? என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்

பாகுபலி 2 படம் வெளிவந்து 50 நாட்கள் கடந்து விட்டது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பிரம்மாண்டமாக வெளிவந்து சாதனை படைத்தது.
பலரும் பாராட்டிய இப்படம் ரூ 1500 கோடி வசூலை தாண்டியது. பின் இதன் வசூல் சாதனையை அமீர்கானின் தங்கல் முந்தியது.
தற்போது சீனாவில் இப்படம் வரும் செப்டம்பர் 17 ம் தேதி 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம். அப்படி வெளியானால் தங்கல் பட சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் ஏராளம்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடிக்க, சினேகா, மலையாள நடிகர் பகத் பாசில் என பெரிய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
அண்மையில் இந்த படம் மிகவும் நன்றாக வந்திருப்பதாக ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது படத்தை பற்றி வந்த தகவல்படி, வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனராம்.
இதற்கு முன் சிவகார்த்திகேயன் படங்களான மான் கராத்தே, மெரினா படங்களின் உரிமையை இந்த தொலைக்காட்சியே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday 15 June 2017

நீண்ட நாள் நண்பரை மணக்கிறார் நடிகை ஷோபனா?

சென்னை: திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா, இப்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.
1970-ல் பிறந்த ஷோபனா, 1984-ல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
ரஜினியுடன் சிவா, தளபதி படங்களில் நடித்தார்.
பின்னர் மெல்ல நடிப்பிலிருந்து விலகி அவர், நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த அவர், 2001-ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் நண்பரையே வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஷோபனா தரப்பில் இதுகுறித்து எந்த தகவலுமில்லை
Image result for shobana

விவசாயிகள் குறித்து பேசியதற்கு விஜய்யை யார் வாழ்த்தினார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்

ளைய தளபதி விஜய் தமிழக மக்களுக்காக பல இடங்களில் குரல் எழுப்பியுள்ளார். அப்படித்தான் சமீபத்தில் விவசாயிகள் குறித்து ஒரு விருது விழாவில் பேசினார்.
அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது, அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் அதை வரவேற்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விஜய்யை மிகவும் பாராட்டியுள்ளார், இதுமட்டுமின்றி திரையுலகத்தில் இருக்கும் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பலரும் விஜய்க்கு தங்கள் பாராட்டை தெரிவிக்க, அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது.

50வது நாளில் ராஜமௌலியின் பாகுபலி 2- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது தெரியுமா?

ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலில் பல சாதனைகளை செய்திருக்கிறது. இதுவரை படம் ரூ. 1,684 கோடி வரை வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் படம் சீனா மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் படம் வெளியாகி இன்றோடு 50 நாளை எட்டியிருக்கிறது. இதனால் பாகுபலி பட ரசிகர்கள் #50DaysForLegendaryBaahubali2 என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
அதோடு இப்படம் இன்று 1076 திரையரங்குகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. எந்தெந்த இடத்தில் எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்ற விவரம் இதோ

Wednesday 14 June 2017

இந்தியிலும் கலக்கும் இருமுகன்

சீயான்’ விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இருமுகன்’. இந்த படம் சமீபத்தில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன்பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை இப்படம் படைத்திருககிறது.
இந்தியில் இப்படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017’ என்ற பெயரில் வெளிவந்தது. நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் விக்ரமின் நடிப்பு திறமையை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநில எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் எல்லையும் கடந்து தெற்காசியா முழுமைக்கும் பரவியிருக்கிறது என்பது நிரூபணமாகிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘சாமி 2’ ஆகிய படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். ‘சாமி 2’படத்தை இயக்குநர் ஹரி இயக்கவிருக்கிறார்.

செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

இளைய தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் என்ன கூறினாலும் அதை பின்பற்ற பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் விவசாயிகள் குறித்து பேசியது செம்ம வைரலாகியது, பலருக்கும் இவை ரீச் ஆனது, இதற்கு முன் சினிமாவிலும் விவசாயிகள் பிரச்சனை குறித்து இவர் பேசியிருந்தார்.
ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே விஜய் கோலா விளம்பரத்தில் நடித்தார் என்று அதை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.
விஜய் கத்தி படம் வந்த போதே கூறிவிட்டார், அது தெரியாமல் நடித்துவிட்டேன், இனி என் வாழ்நாளில் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று, ஆனால், அதையே தற்போதும் எடுத்துக்கொண்டு பேசுவது எந்த விதத்திலும் நியாமில்லை என விஜய் தரப்பு கூறுகின்றது.

ஒரு மணி நேரத்தில் விவேகம் பாடல் டீசர் செய்த சாதனை

ஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் திரைப்படம் விவேகம்.
வேதாளம் படத்தையடுத்து சிவாவோடு அஜித் இணைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் பல சாதனைகளை படைத்தது.
Image result for thala
இதனையடுத்து இன்று 12 மணிக்கு இப்படத்தின் Surviva என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் Views பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் Viewsகளையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது.
டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம்.
Surviva Single Track முழு பாடல் வரும் 19ம் தேதி வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday 13 June 2017

தமிழில் தயாராகும் உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் படம்

பிரபல ஈரான் இயக்குனர் மஜித் மஜிடி படம் என்றாலே உலகப்புகழ் பெற்றது என்பது சினிமாவை தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவரது பாதுக்(Baduk), சில்ரன் ஆஃப் ஹெவன்,(Children of Heaven)  த கலர் ஆஃப் பாரடைஸ்,( The Color Of Paradise) பாரன்,( Baran) த வில்லோ ட்ரீ, ( The Willow Tree) த சாங் ஆஃப் ஸ்பாரோஸ், (The Song of Sparrows) மொஹமத் தமெசன்ஜர் ஆஃப் காட் (Muhammad The Messenger of God). ஆகிய திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்த படங்கள் ஆகும்.
இந்த நிலையில் தற்போது மஜித் மஜிடி, 'பியண்ட் த க்ளவுட்ஸ்' என்ற படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற படங்கள் போல ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு குரலை மட்டும் வேறு மொழிக்கு மாற்றாமல் மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் , மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம்பெரும் தமிழ் நடிகை ஜி வி சாரதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அண்ணன் - தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் இந்த படத்தை  ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டீ ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்த படத்தின் திரைக்கதையிலும் , உள்ளடக்கத்திலும் மூன்று மொழிகளுக்கான கூறுகள் உள்ளன. அதனால் தான் இந்த மூன்று மொழிகளைச் சார்ந்த கலைஞர்களை அதன் மரபு மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இயக்குனர் மஜித் மஜிடி தேர்ந்தெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு திரைக்கதையில் தமிழக நகரம் இடம்பெற்றிருந்தால், அவர் தமிழக நகரத்திற்கு வந்து தமிழ் பேசும் மக்களின் பின்னணியில் தான் அந்த காட்சியை படமாக்குகிறார். இதன் மூலம் தன்னுடைய படைப்பிற்கான நேர்மையை வழங்குவதில் தன்னிகரற்று திகழ்வதாக இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

வெட்கமா இல்ல, போய் டிரஸ் போட்டுட்டு வாங்க: அமலா பாலை விளாசும் நெட்டிசன்ஸ்

சென்னை: ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலா பாலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். முன்பு ஒரு முறை மாடர்ன் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இந்நிலையில் அவர் கருப்பு நிற சட்டை அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.View image on Twitter

பழம் புளிக்கவில்லையாம்: மீண்டும் திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்

சென்னை: மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் உள்ளாராம் அமலா பால். தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2014ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் அமலா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.படங்கள்

விவாகரத்து 
திருமணமான வேகத்தில் அமலா பால், விஜய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றனர். அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. படங்கள் விவாகரத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் பிசியாகிவிட்டார். மலையாளம், தமிழ் என கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடு நடித்துக் கொண்டிருக்கிறார். விடுமுறை படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும் போது எல்லாம் எங்காவது சுற்றுலா சென்றுவிட்டு வருவார். விடுமுறை
தனியாக பயணம் செய்வது புது நம்பிக்கை அளிப்பதாக கூறி வருகிறார். மீண்டும் திருமணம் அமலாவுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா உள்ளதாம். திருமணம் நடக்கும்போது அவரே சொல்வாராம். தற்போதைக்கு அவர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம்.

Monday 12 June 2017

திருமணமான பெண்களின் மைண்ட் வாய்ஸ்…என்னா வாழ்க்கைடா!! இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கா??

1. அலாரம் இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல, அடிக்கிற அலாரத்தை அடிச்சி நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல. .
2. சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் மாமியார் வீட்ல,
சமைச்ச சாப்பாடு காத்துக்கிட்டுருக்கும் நமக்காக அம்மா வீட்ல. .
3. மொபைல் வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல, கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல. .
4. ஓடிக்கிட்டிருக்கிற டிவியை வெறுமனே பார்ப்போம் மாமியார் வீட்ல, ரிமோட் நம்ம கையில் பாடாய்ப்படும் அம்மா வீட்ல. .
5. சுடிதார் துப்பட்டா ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல, துப்பட்டா சர்ட் ஹேங்கர்ல தொங்கிட்டு இருக்கும் அம்மா வீட்ல. .
6. சாப்டலனா.,.அடியே சாப்ட்டுட்டு டிவிய பாரு..ம்ம்ம் இந்தா ஒரு வாய் என்றப்படி ஊட்டிவிடும் அம்மா. சாப்டியாமா… சரிமா .. அந்த தைலத்த கொஞ்சம் எடேன்மா மூட்டுவலி உயிர்போகுது..அப்டியே கொஞ்சம் தடவி விட்ருமா..இது மாமியார் வீட்ல
திருமணமான பெண்களுக்கு சமர்ப்பணம்.

ரோபோவுக்கும் ரோபோவுக்கும் உண்டாகும் காதல் தான் ‘2.0’!

ரோபோ ரஜினிக்கும், ரோபோ எமிக்கும் உண்டான காதல்தான் ‘2.0’ படத்தின் கதையாம்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ‘2.0’. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
‘எந்திரன்’ படத்தில், ஒரு ரஜினி விஞ்ஞானியாகவும், அவர் உருவாக்கிய ரோபோ இன்னொரு ரஜினியாகவும் நடித்திருப்பார். . மனித உணர்ச்சிகளை தெரிந்து கொண்ட ரோபோ ரஜினி, ஹீரோயினான ஐஸ்வர்யா ராயைக் காதலிப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்

இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய 100வது நாடகத்தின் சிறப்பு விருந்தினராக வந்தார், இவருடன் சதீஷ், இயக்குனர் பாக்யராஜ், தம்பி ராமையா என பலரும் வந்திருந்தனர்.
நாடகம் முடிந்து சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘சினிமாவில் இன்று பலபேர் கொடிக்கட்டி பறக்க நாடகம் தான் முக்கிய காரணம், ஏனெனில் பலரும் இங்கிருந்து வந்தவர்கள் தான்.
அவர்கள் பக்கத்தில் அமரவே எனக்கு வெட்கமாக உள்ளது’ என அவர் கூறினார்.

ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது 96 என்ற படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தின் பூஜையின் போது, இப்படம் ஒரு இளம் ஜோடிகளின் காதல் கதை என்றார்.
அனைவரும் ஏங்கும் ஒரு காதல் இதில் இருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக த்ரிஷாவுடன் இணைகிறேன். நான் ரசித்த ஜெஸ்சியுடன் இணைந்து நடிப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

Sunday 11 June 2017

நான்கு மாதத்தில் நான்கு தமிழ் படங்கள் : சமந்தா அதிரடி முடிவு

நடிகை சமந்தாவுக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் நான்கே மாதத்தில் நான்கு தமிழ்படங்களில் நடிக்க உள்ளார்.
சமந்தா தற்போது விஜய் 61, அநீதி கதைகள் , இரும்பு திரை ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார். இவர் திருமணம் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதால் இந்த நான்கு படங்களையும் திருமணத்திற்கு முன்பே நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கான பணிகளில் அவர் தற்போது இறங்கியுள்ளார். நான்கு தமிழ்ப்படங்களிலும் விரைவாக நடித்து முடித்து விட்டு தனது திருமணத்தை எந்தவித டென்சனும் இல்லாமல் ஜாலியாக கொண்டாட இருக்கிறார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தா வும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் நாக சைத்தன்யா வீட்டு முறைப்படியும், சமந்தா வீட்டு முறைப்படியும் நடக்கும் என இருவரும் அறிவித்துள்ளனர்.

கத்தி ஸ்டைலில் விவசாயிகள் பிரச்சனை பற்றி விஜய் இன்று சொன்ன அதிரடி கருத்து

விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பிரச்சனை, கடன் தொல்லை என விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அது பற்றி விஜய் கத்தி என்ற படத்தின் கிளைமாக்ஸில் பேசியிருப்பார். அது போல அவர் இன்று நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார்.

அவர் பேசியபோது "நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும்."

"விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும். 3 வேலை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது" என பேசியுள்ளார்

நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும் கூறினார்.

ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ

இயக்குனர் அட்லீ தற்போது இரண்டாவது முறையாக இளையதளபதி விஜய்யை வைத்து படம் இயக்கிவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் விஜய், அட்லீ இருவரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அட்லீ " நான் டைரக்டரா பேசணும்னா.. கொஞ்சம் அடக்கி வாசிச்சாகனும். நான் அடிப்படையாகவே தளபதி ரசிகன். அவரை வைத்து படம் பண்ணியாகணும் என்று சினிமாவுக்கு வந்த ஆள் நான்."

"அவரை எப்படில்லாம் பார்க்கணும்னு நெனச்சனோ அப்படி ஒரு படம் பன்னிட்டிருக்கும் போது அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. சில நேரம் யோசிப்பேன்.. ஒரு இயக்குனராக சில விஷயங்கள் சொல்ல கூடாது.. ஆன தளபதி ரசிகனா பார்த்தா முடியாது."

"உங்களுக்கு இருக்கும் அதே ஆர்வம், 'எப்போடா படத்தை பார்ப்போம்னு'.. அது எனக்கும் இருக்கு. கூடிய சீக்கிரம் அது நடக்கும்" என கூறினார் அட்லீ.

Saturday 10 June 2017

கண் பார்வையற்ற டான்ஸராக நடிக்கும் சாய் தன்ஷிகா!

கபாலிக்கு பிறகு தனது கேரியர் கிராஃப் எங்கேயோ போகும் என்று நினைத்த தன்ஷிகாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கிடைத்ததெல்லாம் சின்ன படங்கள் மட்டும் தான்.
இவற்றில் நடித்தால் நம் பெயர் கூட வெளியில் தெரியாமல் போய்விடும் என்று பயந்த தன்ஷிகா தன் நடிப்புத் திறமையைக் காட்ட்ட மலையாளப் பட உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
டேவிட் பட இயக்குநர் பீஜாய் நம்பியார் இயக்க, துல்கர் சல்மான் நடிக்கும் ஸோலோ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கண் பார்வையற்ற டான்ஸர் வேடமாம். அந்த படம் வரும்போது தன்னுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லி வருகிறார்.
இருந்தாலும் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது.

அப்போ ஸ்ருதி, இப்போ பிரியங்கா

பிரியங்கா சோப்ரா மூக்கை அழகாக்க ஆபரேஷன் செய்துகொண்டதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்துள்ளனர்.இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டில் பிசி. அவர் நடித்த ஹாலிவுட் படமான ’பேவாட்ச்’ சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரியங்கா.
தைப் பார்த்தவர்கள், ’இப்போதும் மூக்கில் அறுவை சிகிச்சையா? பார்க்க முடியவில்லை’ என்று கிண்டல் செய்துள்ளனர். மேலும் பலர் கொஞ்சம் எல்லைதாண்டி சென்று அவரை கலாய்த்துள்ளனர். ஆனால், பிரியங்கா இதை கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் உதட்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறி, ஸ்ருதி ஹாசனை கலாய்த்திருந்தனர்

Friday 9 June 2017

இளம் சூப்பர் ஸ்டாரான சிவகார்த்திகேயன் - இயக்குனர்கள் வாழ்த்து மழை

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இந்தப் படத்தை இன்ப சேகர் இயக்கியுள்ளார். நேற்று இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என அழைத்தார். இயக்குநர் பேரரசு பேசும் போது, சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என பாராட்டினார்.

படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, ‘‘பட்டங்கள் எல்லாம் நமக்குத் தேவையில்லை. சாதாரண மனிதனாக இருந்து மக்களை மகிழ்வித்தாலே போதும்’’ என்று பேசினார். ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் வருகிற 16-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

கோயில் கோயிலாக சுற்றிவரும் அனுஷ்கா!

பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்காவின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த வண்ணம் உள்ளன. படத்தில் இளமையாக நடித்த நடிகை தமன்னாவைவிட, இளவரசியாகவும், அம்மாவாகவும் நடித்த நடிகை அனுஷ்காவைத்தான் அதிகம் பேருக்குப் பிடித்திருக்கிறது. தற்போது அனுஷ்கா ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் இடையிடையே கோயில் கோயிலாகச் சென்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். தற்போது, காசர்கோடு அருகிலுள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அவருடன், குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இப்படி கோயில் கோயிலாகச் சென்று அனுஷ்கா வழிபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுசிலீக்ஸில் என் லீலை வீடியோ வராததில் வருத்தமே: அமலா பால்

சுசிலீக்ஸ் வீடியோவுக்காக ஆவலுடன் காத்திருந்ததாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் காயம் அடைந்த பிறகு தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.
அதன் பிறகு சுசிலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பலான வீடியோக்கள் வெளியாகின.அமலா
தனுஷ்-அமலா பாலின் லீலை வீடியோ வெளியாகும் என்று சுசியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோ வெளியாகவில்லை.

 
வீடியோ
சுசிலீக்ஸ் வீடியோ பற்றி அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என் வீடியோ வெளியாகும் என்று கூறியதும் அப்படி என்ன தான் வெளியாகும் என்று பார்ப்போம் என்று காத்திருந்தேன் என்றார் அமலா.

 
வருத்தம்
என் வீடியோவை பார்க்க ஆவலாக காத்திருந்த நேரத்தில் அந்த ட்விட்டர் கணக்கு டீஆக்டிவேட் ஆகிவிட்டது. இதனால் என் வீடியோவை பார்க்க முடியாமல் போனதில் வருத்தமே என்று அமலா தெரிவித்துள்ளார்.

 
கசமுசா
சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியான வீடியோக்கள், புகைப்படங்களில் சில உண்மை தான் என கோடம்பாக்கத்தில் விவரம் அறிந்த ஆசாமிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர் ரச்சிதா. இவர் அண்மையில் கூட அந்த தொலைக்காட்சியிலேயே சிறந்த நாயகி விருது எல்லாம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் சீரியல், குடும்பம் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளார். அப்போது அவரிடம் யாருக்கு காதல் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், பாலிவுட் நாயகன் ஹிருத்திக் ரோஷனிடம் காதல் சொல்ல விரும்புகிறேன். நடிக்க வேண்டும் என்றால் தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதோடு மீம்ஸ் கிரியேட் செய்பவர்களை பார்த்தால் அடிக்க தோன்றும் என்றும் கூறியுள்ளார்.

Thursday 8 June 2017

சுசித்ரா வீடியோவை பார்க்க முடியாமல் போனதால் வருத்தம்: அமலாபால்

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபல கோலிவுட் நட்சத்திரங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அதிலும் ஒவ்வொரு நாளும் சினிமா டிரைலர் போல முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகின.
 
அந்த வரிசையில் அமலாபால் வீடியோவும் ஞாயிறு அன்று வெளியாகும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'ஞாயிற்றுக்கிழமை என்னோட வீடியோ வரும் என்று கூறினார்கள். அப்படி என்ன வீடியோ வெளியாகும் என்று நானும் ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் அதற்குள் அந்த அக்கவுண்ட் டீஆக்டிவேட் ஆகிவிட்டது. என் வீடியோவை பார்க்க முடியவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான் என்று அவர் கூறினார்.,
 
மேலும் 'விஐபி' முதல் பாகத்தில் தனுஷின் காதலியாக வந்த நான் 'விஐபி 2' படத்தில் அவருடைய மனைவியாக நடித்துள்ளேன். இந்த படத்தில் கஜோல் மிகப்பெரிய பலம் என்றும் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்' என்று அமலாபால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Wednesday 7 June 2017

கால் நூற்றாண்டுக்குப் பின் ‘காலா’ வில் இணைகிறார்களா ரஜினியும், மம்மூட்டியும்?!

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தைப் பற்றி தினமொரு பரபரப்புச் செய்தி வெளிவருவது வழக்கமாக இருக்கிறது. முதலில் படத்தின் தலைப்பு குறித்து எழுந்தது சர்ச்சை. அதைத் தொடர்ந்து மும்பை தாதா ஒருவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்ட படம் ‘காலா’ என இணையத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில், அந்த மும்பை தாதாவின் மகன் ரஜினிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தது சில நாட்களுக்கு பரபரப்புச் செய்தியாக இருந்தது. அந்தப் பரபரப்பு ஓயும் முன் ‘காலா’ திரைப்படத் தலைப்பும், கதையும் என்னுடையது. அதைப் காப்பி அடித்து விட்டது இயக்குனர் தரப்பு என உதவி இயக்குனர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது. இதெல்லாம் ‘காலா’ வைப் பொறுத்த வரை பழைய பரபரப்புகள்! காலாவின் தற்போதைய ஸ்பெஷல் பரபரப்பு என்ன தெரியுமா?

இயக்குனர் மணிரத்னத்தின் ‘ தளபதி’ திரைப்படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட (கால் நூற்றாண்டு) 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் ரஜினியும், மம்மூட்டியும் ‘காலா’ வில் இணைந்து நடிக்கவிருக்கின்றனராம். இப்படி ஒரு விண்ணப்பத்தை ரஜினியின் மருமகனும் நடிகரும், காலா திரைப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ், மம்மூட்டியிடம் முன் வைத்த போது; மம்மூட்டி மிக மகிழ்ந்து உடனே ஓ.கே சொன்னார் என்றொரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து இயக்குனர் தரப்பில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையிலும் ‘தளபதி’ யில் ரஜினி, மம்மூட்டி இணை திரையில் நிகழ்த்திய அருமையான நடிப்பைக் கண்டு களித்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் அவர்களது காம்பினேஷனில் மீண்டுமொரு திரைப்படம் என்ற அறிவிப்பை மனமுவந்து வரவேற்பார்கள் என்றே தெரிகிறது.

என் உடம்பு என்ன வேணும்னாலும் செய்வேன், உங்களுக்கென்ன: ஸ்ருதி பாய்ச்சல்

ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி இந்தி படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. அவர் கையில் சபாஷ் நாயுடு படம் மட்டுமே உள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிவிட்டார்.
பெஹன் ஹோகி தேரி படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.உதடு
ஸ்ருதி ஹாஸன் அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகுபடுத்தியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதியின் சமீபத்திய புகைப்படத்துடன் கலாய்க்கிறார்கள்.ஸ்ருதி
உதட்டை அழகுபடுத்தியதை ஒப்புக் கொள்ளவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை ஸ்ருதி. இது குறித்து ஸ்ருதி கூறும்போது, என் உடம்பு, என் முகம் என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்றார்.
 
சமூக வலைதளம்
சமூக வலைதளங்களில் யார் என்னை பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
 
வெயிட்
ஸ்ருதி ஹாஸன் வெயிட் போட்டுவிட்டதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்தார்கள். அவர் பெஹன் ஹோகி தேரி படத்திற்காக வெயிட் போட்டாராம். ஒரு நடிகை எப்பொழுதுமே ஒல்லியாகவே இருக்க முடியாது. நாங்களும் மனிதர்கள் தான். படத்திற்காக வெயிட் போடுவோம், குறைப்போம். சில சமயம் அது இயற்கையாகவே நடக்கும் என ஸ்ருதி கூறியுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...