நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது.
செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தன. நாடோடி தென்றல் படம் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பின் வாய்ப்பில்லாமல் போனது.
ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து பின் சில ஆண்டுகளில் பிரிந்தார். பின் சமீபத்தில் சன்யாசம் வாங்கிய ரஞ்சிதா தன் பெயரை ஆனந்த மயி என்று மாற்றிக்கொண்டு தலைமை சேவகராக ஆஸ்ரமத்தில் இருக்கிறாராம்.