Thursday 29 September 2016

விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்

திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில், சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் நடித்த ‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்தும், திருட்டு விசிடிகளாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.
பல கோடி முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விற்கும் திருட்டு விசிடி பிரச்சினைகளால் திரைப்பட தொழிலே நசிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்சினையை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம். எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படைமாக இப்படங்கள் இருந்தபோதிலும் திரையுலகின் பிரச்சினையான இதை பொதுநலன் கருதி இப்பிரச்சினை மீது உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு இணையதள ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்களின் உதவியோடு தடுப்பதோடு திருட்டு விசிடியாக விற்பனை செய்வதை தடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். திருட்டு விசிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள இந்த முயற்சியை அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மேற்கொண்டால் திருட்டு விசிடியை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்று கூறியுள்ளார்

அஜித் படத்துக்கு வில்லன் ரெடி

அஜித் படங்களின் நடிகர், நடிகையர்களின் விவரங்கள் ரொம்பவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும். இருப்பினும், அவர் படத்தில் நடிப்பவர்களுடைய விவரங்கள் எப்படியாவது வெளியே வந்துவிடுகின்றன. அஜித் தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவா படத்திற்கு முதலில் யார் ஹீரோயின் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.
காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பது அரசல் புரசலாக பேச்சு அடிபடவே, இறுதியில், படக்குழுவினரே காஜல் அகர்வால்தான் ஹீரோயின் என்பதை உறுதி செய்தனர். அதன்படி, தற்போது அஜித் படத்தின் வில்லன் தேடுதல் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடைசியில், ஒரு பாலிவுட் நடிகர் ஒருவரை இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசர் வெளியாகும்போது அந்த வில்லனை அறிமுகப்படுத்தலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரசன்னா, அரவிந்த்சாமி ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.201609281258440591_what-wrong-for-celebrate-sivakarthikeyan-vijay-sethupathi_secvpf
இப்படம் வெளியாகும் தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படமும் வெளியாகவிருக்கிறது. இவ்விரு படங்களும் போட்டியாக களமிறங்கும் நேரத்தில் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ ஸ்டைலில் ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு போஸ் கொடுத்து அவரை கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து விஜய் சேதுபதி பேசும்போது, ‘றெக்க’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்டைலான போஸ் ஒன்றை கொடுத்திருப்பேன். இப்படியொரு காட்சியை இயக்குனரிடம் வைக்க சொன்னது நான்தான்.
எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் எல்லாரையும் நிறைய பேர் கொண்டாடிவிட்டார்கள். என் சமகாலத்தில் எனக்கு போட்டி என்று கூறப்படும் சிவகார்த்திகேயன் படத்தை கொண்டாடுவதில் என்ன தப்பு? அதில் எனக்கு சந்தோஷமே. எந்த வருத்தமும் இல்லை. ‘ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும். இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என்று பேசினார்.

Tuesday 27 September 2016

மீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா

மீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா

சமீபகாலமாக ரஜினி படத்தின் தலைப்பை வைத்து கோலிவுட்டில் புதிய சினிமாக்கள் உருவாகி வருகின்றன. அப்படி, ரஜினி படத்தலைப்பை வைத்து உருவாகும் சினிமாக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
இதனால், தற்போது தமிழ் சினிமாவில் ரஜினியின் பழைய படங்களின் தலைப்பை வைப்பது டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், தற்போது கிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ரஜினி படத் தலைப்பான ‘வீரா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் ‘வீரா’ படம் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது. மீனா, ரோஜா ஆகியோர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். தற்போது கிருஷ்ணா நடிக்கும் ‘வீரா’ படத்தை ராஜாராம் இயக்கவிருக்கிறார்.
கிருஷ்ணாவுடன் கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஏற்கெனவே, கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கழுகு’ படம், 1981-ல் முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்கூடவே நடித்தவர் அப்புக்குட்டி. இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித கப்பல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது. அஜித்தை பற்றி ஒவ்வொரு முறையும் அப்புக்குட்டி புகழ்ந்து வந்தாலும், தற்போது அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அப்புக்குட்டி பீல் பண்ணும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்துள்ளது.
அதாவது, அப்புக்குட்டிக்காக தனியாக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி அவரது கெட்டப்பையே மாற்றியவர் அஜித்தான். அந்த போட்டோ ஷுட்டிற்கு பிறகு அப்புக்குட்டி இப்போது ஹீரோவாக நடிக்கும் ‘காகித கப்பல்’ ஆடியோ விழா நடந்த சமயத்தில் அஜித் அவருக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லியுள்ளார்.
மிகப்பெரிய ஸ்டாரான அஜித், அப்புக்குட்டியை வாழ்த்தியது ரொம்ப பெருமையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாம். அவர் இப்படி வாழ்த்து சொல்வாருன்னு அப்புக்குட்டி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லையாம்.
இப்படத்தில் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும்படி ஒரு பாடல் வைத்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல், அப்புக்குட்டிக்கு டூயர் பாடல் ஒன்று உள்ளதாம். அதில் அப்புக்குட்டி நடனம் ஆடி அசத்தியிருக்கிறாராம்.

Saturday 24 September 2016

சீனாவின் உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24

சூர்யா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ’24’. அப்பா, மகன்,வில்லன் என 3 வேடங்களில் சூர்யா நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் 3-வது சில்க் ரோடு உலக திரைப்படவிழாவில் மீடியா ஹானர்போட்டி என்ற பிரிவில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.இது குறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ ‘24’ திரைப்படம் நேற்று நடைபெற்ற 3-வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.
பெருமைக்குரிய இந்த திரைப்பட விழாவில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நிர்வாக அதிகாரி ராஜசேகரபாண்டியன் கலந்து கொண்டார். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இது தான். இதை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகவும், எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் நாங்கள் கருதுகிறோம்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது

சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும் நடித்து வருகின்றனர். 3-வது நாயகி தேடும் படலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவின் முதல் கெட்டப்பான ‘மதுர மைக்கேல்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிம்புவின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி, அஸ்வின் தாத்தா என்ற 60 வயது முதியவராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு முதியவராக நடித்ததில்லை என்பதால் இந்த கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday 23 September 2016

தொடரி – திரை விமர்சனம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ்.
பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.
இந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த பிரச்சினையில் தனுஷின் காதலியான கீர்த்தி சுரேஷை கொன்றுவிடுவதாக ஹரிஷ் உத்தமன் மிரட்ட, பயந்துபோய் கீர்த்தி சுரேஷ் ரெயில் என்ஜின் அறையில் பதுங்கிக் கொள்கிறார்.
தனுஷையும் ஒரு அறையில் போட்டு பூட்ட, அங்கிருந்து தனுஷ் தப்பித்து கீர்த்தி சுரேஷை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். இந்நிலையில், ரெயில் என்ஜின் டிரைவர் திடீரென இறந்துபோக, ரெயில் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக செல்கிறது.
ரெயிலை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக மீடியாவில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்க, தனுஷோ தனது காதலியை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். ரெயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்குகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தினார்களா? தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
கேண்டீன் ஊழியராக தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுக்க ரெயிலுக்குள்ளேயே நடப்பதால் இவரது நடிப்புக்கு ஏற்ற தீனி இந்த படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே உடையணிந்து வந்தாலும், காட்சிக்கு காட்சி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். படத்தில் முதல்பாதி முழுக்க தனுஷுடன் டூயட் பாடுவது, ரொமான்ஸ் பண்ணுவது என வரும் இவர், இடைவேளைக்கு பிறகு ரெயில் என்ஜினில் இவரது கதாபாத்திரத்தை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.
பிரபு சாலமன் படங்களில் எப்போதும் தம்பிராமையாவின் காமெடிக்கு தனி மவுசு இருக்கும். ஆனால், இந்த படத்தில் தம்பி ராமையாவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடிக்கு கூடவே கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் காமெடி ரசிக்கும்படி இல்லை.
மந்திரியாக வரும் ராதாரவி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கருப்பு பூனை படைவீரராக வரும் ஹரிஷ் உத்தமன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லன் என்றால் ரசிகர்கள் வெறுக்கும்படியாக இருக்கவேண்டும். அவ்வாறே இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.
மற்றபடி, ரெயில்வே போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், என்ஜின் டிரைவராக வரும் ஆர்.வி.உதயகுமார், டிக்கெட் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, டிவியில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களாக வந்தாலும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் பிரபு சாலமன், பயணத்தை மையமாக வைத்து தனது வழக்கமான பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு படத்தை முழுக்க ரெயிலில் எடுக்கமுடியுமா? என்பதற்கு சவால் விடும்படியாக இவரது படைப்பு உள்ளது.
படத்தின் இடைவேளைக்கு சற்று முன்னர்தான் கதையே ஆரம்பிக்கிறது. ஆகையால், படத்தின் முதல் பாதி காமெடி, காதல் என இழுஇழுவென கதையை இழுத்திருக்கிறார்.
இடைவேளைக்கு பிறகு ரெயிலைப்போன்று கதையும் வேகமெடுக்கிறது. முதல்பாதியை குறைத்திருந்தால் படம் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும்.
அதேபோல், பிரபு சாலமன் படங்களில் இயற்கை காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் இயற்கை காட்சிகளை வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.
பின்னணி இசையில் வேகம் கூட்டியிருக்கலாம். படத்தில் ‘போன உசுரு வந்துடுச்சே’ பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், அதன் பின்னணியை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க விடாமல் செய்துவிட்டது.
மொத்தத்தில் ‘தொடரி’ வேகமில்லா பயணம்

விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்

விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்

விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், விஜய் ராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
201609231622190867_vijay-acting-bairavaa-movie-intresting-news_secvpf
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படம் பற்றிய பலருக்கும் தெரியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
‘பைரவா’ படத்தின் கதை கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறதாம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பாப்ரி கோஷ் நடிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் பரிந்துரை செய்தாராம். பாப்ரி கோஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பைரவா’ படத்தில் எக்காரணத்தை கொண்டும் பஞ்ச் டயலாக் இருக்கக்கூடாது என்று இயக்குனரிடம் விஜய் கேட்டுக் கொண்டாராம். அதேநேரத்தில் ஒவ்வொரு வசனமும் பவர் புல்லாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
இப்படத்தில் விஜய் கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
மற்ற படங்களைப் போலவே விஜய் இந்த படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளார். அந்த பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்யவுள்ளனர்.
கபாலி படத்தில் நடித்த ‘மைம்’ கோபி இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Tuesday 20 September 2016

திருமணம் ஆன தெலுங்கு பட அதிபருடன் அனுஷ்கா காதல்?

திருமணம் ஆன தெலுங்கு பட அதிபருடன் அனுஷ்கா காதல்?

அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ‘பாகுபலி-2’ படத்துக்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அனுஷ்கா ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவரையே திருமணம்செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அனுஷ்கா கதாநாயகியாக நடித்த படம் ஒன்றை இந்த பெரிய தயாரிப்பாளர் தயாரித்தார். அப்போது தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறிவிட்டது என்று தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தயாரிப்பாளர் திருமணமானவர். வேகமாக பரவிவரும் இந்த தகவலை அனுஷ்கா இதுவரை மறுக்கவில்லை.
ஏற்கனவே அனுஷ்காவுக்கும் மூத்த தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் காதல் என்று கூறப்பட்டது. பின்னர் தெலுங்கு வாரிசு நடிகருடனும், இயக்குனர் ஒருவருடனும் அனுஷ்காவை இணைத்து பேசினார்கள். இப்போது தெலுங்கு பட தயாரிப்பாளருடன் சேர்த்து இருக்கிறார்கள்.
இவர் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்தவர். இது உண்மையா? பரப்பிவிடப்பட்ட புரளியா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

தனுஷுடன் மோதும் விஜய் சேதுபத


தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ படம் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனுடன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆண்டவன் கட்டளை’ படமும் வெளியாகவுள்ளது. ஆனால், ‘தொடரி’ படம் வெளியான மறுநாள் செப் 23-ந் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நாசர், சிங்கம் புலி, நமோ நாரயணா, பூஜா தேவரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது “சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை” நடிகை அனுஷ்கா சொல்கிறார்

“சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது.
எனவே பெண்கள் நடிக்201609190330075406_women-do-not-need-to-be-afraid-to-act-in-films-actress_secvpfக வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.
அதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன்.
கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.
நான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.
புதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
நல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன. என் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன்.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

தனுஷூடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங்

ரித்திகா சிங் பத்திரிகை நிருபராகவும், கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடும் இளைஞனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ”ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன்.
இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. படப்பிடிப்பில் மற்றவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல எனக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருக்கிறார்.
விரைவில் தமிழ்பேச கற்றுக்கொள்வேன். முதல் படத்தில் தேசிய விருது கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இனி எந்த வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.
தமிழில் தனுஷ் பிடிக்கும். அவரு201609191921287240_i-wish-to-act-with-dhanush-says-ritika-singh_secvpfடன் நடிக்க ஆசை. நான் ஜோதிகாவின் ரசிகை. அவரது நடிப்யை மிகவும் ரசிப்பேன். தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு படம் தான் நடித்திருக்கிறேன்.
என்றாலும் என்னை மிகவும் பாராட்டுகிறார்கள். முகத்தில் காயம்பட்டால் படத்தில் நடிப்பதை பாதிக்கும் என்பதால் இப்போது பாக்சிங் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மிகவும் உதவினார். நடிப்புதிறமையை கற்று வருகிறேன். படப்பிடிப்பில் இயக்குனர் சொல்வதை செய்கிறேன். அடுத்து பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கிறேன். தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

Monday 15 August 2016

விஜய், ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க ஆசை: விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இருமுகன்’. இப்படத்தில் இரு வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். படங்களில் வித்தியாச வேடமேற்று நடித்திருக்கும் இவருக்குள்ளும் ஒரு இயக்குனர் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார்.

சென்னை பெருவெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு பாடலாக உருவாக்கி, அந்த பாடலில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார் விக்ரம். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது அவருக்கும் படத்தை இயக்கும் ஆசை துளிர்விட்டுள்ளது.

அவர் அப்படி படம் இயக்குவதென்றால், விஜய் அல்லது ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். விக்ரம் தனது மகன் துருவ்வை வைத்து படம் இயக்க ஆசை இருந்தாலும், அவன் இன்னும் அதற்கு தயாராகததால் இப்போதைக்கு இந்த முடிவு என்று கூறியுள்ளார். விக்ரமின் இந்த ஆசையை விஜய்யும், ஜெயம் ரவியும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

பாகுபலி-2 படத்தை வெளியிடும் புதிய தயாரிப்பு நிறுவனம்

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள ‘பாகுபலி – 2’ படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கே.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே வெளியிடுகிறது.
‘பாகுபலி’ படத்தின் முதல்பாகத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தை புதிதாக தொடங்கப்பட்ட கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.201608140959212561_baahubali-2-release-new-production-company_SECVPF
‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுவது மட்டுமல்லாது ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிப்பில் உருவாகும் ‘மடை திறந்து’ என்ற படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கிறது.
இப்படத்தை சத்யசிவா இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழில் ‘மடைதிறந்து’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘1945’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது

மதுரை மீனாட்சியம்மன் கோவில் விஷால்-தமன்னா தரிசனம்


விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்திசண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் வடிவேலு காமெடியனாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். மேலும், சூரியும் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதைத் தொடர்நது தற்போது மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இப்படத்தில் நடிக்கும் விஷால், தமன்னா, சௌந்தர்ராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வந்தனர். அப்போது, அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
201608141411139526_Vishal-Tamannah-dharshan-in-Madurai-Meenakshi-Amman-Temple_SECVPF

Tuesday 26 July 2016

2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன.
ஷங்கர் இதற்கான திரைக்கதையை உருவாக்கி ரஜினிகாந்தின் சம்மதத்தையும் பெற்றார். ரூ.350 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்க முடிவானது. இதில் கதாநாயகியாக நடிக்க எமிஜாக்சனும் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் படப்பிடிப்பு தொடங்கியது. வடபழனி ஸ்டூடியோக்கள், அடையாறு போட் கிளப் போன்ற பகுதிகளிலும் ரஜினிகாந்த் நடிக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லனாக வரும் அக்‌ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள்.
பின்னர், ரஜினிகாந்த் கபாலி பட வேலைகளில் ஈடுபட்டதால் 2.0 படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் ரஜினிகாந்த் இல்லாமல் மற்ற நடிகர்-நடிகைகள் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தன.
50 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் கூறினார். இந்த நிலையில், அமெரிக்காவில் ஓய்வுக்காக சென்ற ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் அவருக்காக காத்திருந்த 2.0 படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள்.
ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தற்போது கபாலி படம் திரைக்கு வந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து 2.0 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படப்பிடிப்பு குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.
பூந்தமல்லி அருகே பலகோடி ரூபாய் செலவில் சென்னை நகரம் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். இந்த அரங்கில் பலமாடி கட்டிடங்கள், தார் ரோடுகள், கடை வீதிகள், வணிக வளாகங்கள், ரெயில் நிலையம், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவை அரங்குகளாக அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த அரங்கில் ஓரிரு வாரத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் 2.0 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.201607260924281555_Rajinikanth-again-acting-film-enthiran-2_SECVPF

Wednesday 20 July 2016

கபாலி படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க படக்குழுவுக்கு ஏற்பாடு செய்த சிம்பு

201607201558174248_Simbu-surprise-AAA-team-for-kabali-tickets_SECVPF
சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற ஜுலை 22-ந் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாகவுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிம்பு, தனது படக்குழுவினர் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியே பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தள்ளது. சிம்பு, ரஜினி மற்றும் அஜித் படங்கள் வெளியானால் முதல்நாளே முதல் காட்சியே பார்த்துவிடும் வழக்கம் உடையவர். அதன்படி, இந்த முறை ரஜினியின் படம் வெளியாகும் நாளில் தனது படக்குழுவினர் அனைவருக்கும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது

ஒருவாரத்துக்கு முன்னதாகவே ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்

201607201348586111_Thirunaal-release-date-preponed_SECVPF
‘ஈ’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா-நயன்தாரா ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் என்பவர் இயக்கியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. எப்போதோ வெளியாகவேண்டிய இப்படத்தை வரும் ஆகஸ்ட் 12-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ஆகிய ‘வாகா’ ஆகிய படங்கள் வெளியாவதால் பலத்த போட்டி நிலவியது.
எனவே, இந்த போட்டியில் இருந்து யார் பின்வாங்குவார்கள்? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதன்முதலாக ‘திருநாள்’ பின்வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என கூறப்பட்ட ‘திருநாள்’, தற்போது ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் மீனாட்சி, கருணாஸ், ‘நீயா நானா’ கோபிநாத், சரத் லோகிதாஸ்வா, ஜோ மல்லூரி உள்ளிட்டோரும் நடித்தள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கோதண்டபானி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

கபாலி குறித்து விஜய் சொன்னது என்ன?

201607201510295800_Vijay-talks-about-kabali_SECVPF
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தில் உள்ளவர்களும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு எடிட்டிங் பணியை மேற்கொண்ட பிரவீன் கே.எல்., சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் விஜய் ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கிறது என்று விஜய் ஆர்வத்துடன் கேட்டாராம். அதற்கு பிரவீன், ரொம்பவும் சூப்பராக வந்துள்ளது. தளபதி, பாட்ஷாவைவிட ஒருபடி மேலே இருக்கும் என்று கூறினாராம்.
இதைக்கேட்டு வியந்துபோன விஜய், “தலைவர் படம்னா சும்மாவா… கண்டிப்பா நல்லா வரும்…’ என்ற கூறியுள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரவீன் கே.எல்., தெரிவித்தார். விஜய்யும் ‘கபாலி’ படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பது இதிலிருந்து தெரிகிறது

Tuesday 19 July 2016

கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்: லட்சுமிமேனன்

கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்: லட்சுமிமேனன்

கிராமத்து பெண் வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் லட்சுமிமேனன்.
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘கொம்பன்’ படங்களில் இவர் நடித்த பாத்திரங்களில் அப்படியே பொருந்தினார். கிராமத்து பெண் வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார் என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதனால் லட்சுமிமேனனுக்கு கிராமத்து பெண் வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தற்போது விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலும் லட்சுமிமேனன் கிராமத்து பெண்ணாகவே வருகிறார். இந்த வேடங்களில் சிறப்பாக நடிப்பது எப்படி? என்பது குறித்து லட்சுமிமேனன் கூறும்போது…
“நான் படப்பிடிப்புக்காக கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களுடன் சாதாரணமாக பழகுவேன். அப்போது அவர்களுடைய பேச்சு, பழக்கம், உடல் அசைவு போன்றவற்றை கவனமாக பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்வேன்.
நடிக்கும்போது கிராமத்து பெண்களின் அசைவுகளை அப்படியே பிரதிபலிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்கும் படங்களில் கிராமத்து பெண்களை மனதில் நிறுத்தி அதுபோல் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்.
என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். என்றாலும், கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதற்கு நான் பழகிய கிராமத்து பெண்களே எனக்கு முன் உதாரணம்” என்றார்.

கபாலி சென்னை-செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

201607181059091077_Kabali-chennai-chengalpattu-areas-distribution-acquired-SPI_SECVPFரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி பிரம்மாண்டமாக வெளிவருகிறது. இப்படத்தை வாங்கி வெளியிட பல்வேறு விநியோகஸ்தர்களும் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ‘கபாலி’ படத்தின் வெளியீட்டு உரிமையை ஏற்கெனவே ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.201607181059091077_Kabali-chennai-chengalpattu-areas-distribution-acquired-SPI_SECVPF
அதைத் தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு ஏரியா வெளியீட்டு உரிமையை ஏ.ஜி.எஸ்., நிறுவனமும், சென்னை வெளியீட்டு உரிமையை எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனமும் வாங்கியுள்ளது. எஸ்.பி.ஐ.சினிமாஸ் கடந்த சில தினங்களுக்கு ‘கபாலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல்நாள் காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்திற்காக சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கே ‘கபாலி’ சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது. சிறப்பு காட்சிகளில் டிக்கெட் விலை ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் எனவும் தெரிகிறது

சாந்தனு பட டீசரை வெளியிடும் ஜெயம்ரவி

சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘முப்பரிமாணம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இயக்குனர்கள் கதிர், பாலா ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் அப்புக்குட்டி நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இப்பட201607191525289124_Jayamravi-launches-shanthanu-movie-teaser_SECVPFத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்தார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது உருவாகியுள்ளது. இந்த டீசரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் ஜெயம் ரவி வெளியிடவுள்ளார். இதனை சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இப்படத்தை சமயாலயா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் விசு மற்றும் வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 27 பிரபல நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday 13 July 2016

20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் அமிதாப் பச்சன்

அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அண்மையில் அட்லியை நேரில் வரவழைத்து பேசிய அஜித், தனக்கேற்ற கதை இருக்குமாறு கேட்டதாகவும், அதன்பிறகு அட்லி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும், அந்த கதையில் நடிக்க அஜித் விரும்பியதாகவும் கூறப்பட்டது.201607121624110267_amitabh-bachchan-joint-with-ajith-after-20-years_SECVPF
இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கெனவே 1996-ஆம் ஆண்டு தமிழில் அஜித்-விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘உல்லாசம்’ படத்தை தயாரித்துள்ளார்.
அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு, தமிழில் எந்த படமும் தயாரிக்காத அமிதாப் பச்சன், 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் படம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா வில்லன் இப்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அயன்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆகாஷ்தீப் சைகல். சேட்டு வீட்டு பையனாக நடித்திருந்த ஆகாஷ்தீப் சைகல் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். சூர்யாவுக்கு வில்லனாக நடித்த ஆகாஷ்தீப் சைகல் தற்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்.201607121528429392_Suriya-movie-villain-next-vijay-sethupathi-villain_SECVPF
விஜய் சேதுபதி-டி.ராஜேந்தர் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஆகாஷ்தீப் சைகல் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் கே.வி.ஆனந்த் தான் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது. மடோனா செபஸ்டியான் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்

Monday 11 July 2016

Tamil Cinema News: தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

Tamil Cinema News: தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்: சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படு...

என் மனதை பாதித்த சம்பவங்களையே அப்பா படத்தின் கதையாக உருவாக்கினேன்: சமுத்திரக்கனி

திரைப்பட இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் அப்பா. இந்த திரைப்படம் ஈரோட்டில் 3 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. ரசிகர்களை கவர்ந்து உள்ள அப்பா திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வகையில் சமுத்திரக்கனி மற்றும் அப்பா திரைப்பட நடிகர் குழுவினர் 8-ந்தேதி ஈரோடு வந்தனர்.201607111054599541_affected-my-mind-appa-movie-developed-story-Samuthirakani_SECVPF

பின்னர் அவர்கள் திருப்பூர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அப்பா திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதைப்பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. படத்தை பார்ப்பதற்காக குழந்தைகளும், பெண்களும் கூட்டம் கூட்டமாக வருவதை பார்க்கிறேன். அவர்களுக்கான படத்தை எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் நான் இந்த படத்தை எடுத்தபோது பலருக்கும் நம்பிக்கை இல்லை. அப்பா என்ற பெயரே நன்றாக இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்பா என்ற வார்த்தையின் வலிமை தெரியும். எனது கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவேதான் நான் வேறு தயாரிப்பாளரை தேடாமல் நானே நண்பர்கள் உதவியுடன் தயாரித்தேன்.
பொதுவான திரைப்படங்களில் இருப்பதுபோல குத்துப்பாட்டு, சண்டை காட்சிகள் இதில் இல்லை. இதுவே பெரிய குறையாக சிலர் கூறினார்கள். ஆனால் நான் இதுதான் என் படம் என்று கூறி எடுத்தேன். நான் கதை எழுதும்போதே எந்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள் என்று நினைத்தேனோ, அந்த இடத்தில் கைத்தட்டினார்கள்.
எந்த இடத்தில் மனம் கலங்குவார்கள் என்று நினைத்தேனோ, அந்த இடத்தில் கலங்கினார்கள். காரணம் நான் ஒரு ரசிகனாக இருந்து இந்த கதையை எழுதினேன். வேறு யாரிடமும் இருந்து கதையை வாங்கவில்லை. தினசரி நான் பார்க்கும் சம்பவங்கள், என் மனதை பாதித்த சம்பவங்களையே கதையாக உருவாக்கினேன். 1040 மதிப்பெண்கள் வாங்கிய தைரிய லட்சுமி என்ற மாணவியின் தற்கொலை செய்தி என்னை வெகுவாக பாதித்தது. அதைத்தொடர்ந்து வந்த செய்திகளை மனதில் கொண்டு கதையை உருவாக்கினேன்.
இந்த படத்தில் நான் முதலில் கிளைமாக்ஸ் (உச்சக்கட்ட காட்சியை) தான் முதலில் எழுதினேன். அதன் பின்னர் தான் மற்ற காட்சிகள் உருவாக்கப்பட்டன. அதாவது கிளைமாக்சில் இருந்து தொடக்கத்தை நோக்கி எழுதினேன்.
என்னை பொறுத்தவரை இந்த சமூகத்தை உடனடியாக மாற்ற முடியாது என்பது தெரியும். ஊழல் நிறைந்த இந்த சமூகத்தில் உடனடி மாற்றம் என்பது நடக்காது. ஆனால் அடுத்த தலைமுறைக்கு நாம் சிலவற்றை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே எனது கதைகள் அடுத்த தலைமுறைக்கானதாகவே இருக்கும். கற்பனை இல்லாத நிஜமான கதையை கொடுத்த கதாசிரியனாக இந்த படத்தில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன்.
இவ்வாறு திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார்.
பேட்டியின்போது ஈரோட்டை சேர்ந்த நடிகர் நாடோடிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் அப்பா படத்தின் கலைஞர்கள் உடன் இருந்தனர்

சிம்பு படத்தில் அண்ணனுடன் களமிறங்கும் மொட்டை ராஜேந்திரன்

201607111119456804_Mottai-Rajendiran-in-Simbu-AAA-movie_SECVPF‘நான் கடவுள்’ படத்தின் மூலம் இயக்குனர் பாலாவால் வில்லனாக அறிமுகமானவர்தான் மொட்டை ராஜேந்திரன். அதன்பிறகு, ஒருசில படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக நடித்து வந்தவரை, அட்லி தனது ‘ராஜாராணி’ படத்தின் மூலம் காமெடியனாக்கிவிட்டார்.201607111119456804_Mottai-Rajendiran-in-Simbu-AAA-movie_SECVPF

அந்த படத்திலிருந்து தற்போது வரை அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்பவர்களைவிட, காமெடியனாக ஒப்பந்தம் செய்பவர்கள்தான் அதிகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய காமெடிக்காகவே ஓடியது என்றால் அது மிகையாகாது.
அஜித், விஜய் என முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன் தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சிம்பு நடிக்கும் படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் அண்ணன் மாரி மணி என்பவரும் இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே, மஹத், ஸ்ரேயா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள்.maxresdefault
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு வேனுக்கு தவணை கட்டாததால் கடன் கொடுத்த சேட்டு, அந்த வேனை எடுத்துச் சென்றுவிடுகிறார்.
இதுபற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட, சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி விடுகிறாள்.
இதனால் கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடிக்கிறாள். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள்.
அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள்.
இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. சந்தானம் வசதியானவன் என்று நினைத்து இவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறார். பின்னர், சந்தானம் வசதியானவர் இல்லை என்று தெரியவந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன்பிறகு, நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார். அப்போது சந்தானம் உள்ளே புகுந்து அதை கலைத்துவிடுகிறார்.
சந்தானத்தை நேரடியாக எதிர்க்க முடியாத சேட்டு, ரவுடியான நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார். சந்தானத்தை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜேந்திரன் பலே திட்டம் ஒன்றை போடுகிறார்.
அதன்படி, சந்தானத்திற்கு, சனாயாவை திருமணம் செய்து கொடுப்பதாக நம்ப வைத்து, சிவன் கொண்ட மலையில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை கொலை திட்டம் போடுகிறார்கள்.
அதன்படி, நாயகியின் அப்பா, சந்தானத்தை அந்த பங்களாவுக்கு குடும்பத்தோடு அழைத்து செல்கிறார். ஏற்கெனவே, பேய் இருக்கும் அந்த பங்களாவில் ராஜேந்திரனின் திட்டம் நிறைவேறியதா? அல்லது அங்கிருந்த பேய் இவர்களை ஆட்டுவித்ததா? என்பதை நகைச்சுவையுடன் திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சந்தானம், முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் ஹீரோவுக்குண்டான தகுதியில் கூடியிருக்கிறார். குறிப்பாக, நடனம், சண்டை காட்சிகள் ஆகியவற்றை ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையாக செய்து காட்டியிருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் திகில் படம் என்பதையும் தாண்டி காமெடி சரவெடியாக வெடித்திருக்கிறது.
நாயகி சனாயா புதுமுகம் என்றாலும், நடிப்பில் அது தெரியவில்லை. அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். சேட்டு பெண் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
படம் முழுக்க சந்தானத்துடன் பயணிக்கும் கருணாஸ், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. பேய்க்குப் பயந்து இவர் நடுங்கும் காட்சிகள் எல்லாம் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.
சேட்டுவாக வரும் பாலிவுட் நடிகர் சௌரப் சுக்லாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஹைடெக்கான ரவுடியாக வரும் மொட்டை ராஜேந்திரன், சந்தானத்தை கொல்வதற்கு போடும் திட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை கலாட்டா ஆரம்பிக்கிறது.
படத்தின் இறுதிவரை நகைச்சுவைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். குறிப்பாக உண்மையான பேயிடம் இவர் அடிவாங்கும் காட்சிகள் உச்சக்கட்ட காமெடி.
சந்தானத்துக்கு அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் ஹாலிவுட்டுக்கு இணையாக போடும் கெட்டப்புகள் எல்லாம் அசத்தல். நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.
சின்னத்திரையில் வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பல படங்களை கிண்டல், கேலி செய்த ராம்பாலா, ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை திகில் கலந்து சொல்லியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க நகைச்சுவை விருந்து கொடுப்பது என்பது சவாலான விஷயம். அதை இயக்குனர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
சந்தானத்தை மாஸ் ஹீரோவாக காட்டும் வகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காமெடி படத்திலும் திகில் கலந்து ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.
தமன் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையிலும் திகிலூட்டியிருக்கிறார். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. திகிலூட்டும் காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் நம்மை பயமுறுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ‘தில்லுக்கு துட்டு’ த்ரில்லான ஹிட்டு.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...