Monday 15 August 2016

பாகுபலி-2 படத்தை வெளியிடும் புதிய தயாரிப்பு நிறுவனம்

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள ‘பாகுபலி – 2’ படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கே.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே வெளியிடுகிறது.
‘பாகுபலி’ படத்தின் முதல்பாகத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தை புதிதாக தொடங்கப்பட்ட கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.201608140959212561_baahubali-2-release-new-production-company_SECVPF
‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுவது மட்டுமல்லாது ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிப்பில் உருவாகும் ‘மடை திறந்து’ என்ற படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கிறது.
இப்படத்தை சத்யசிவா இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழில் ‘மடைதிறந்து’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘1945’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...