சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற ஜுலை 22-ந் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாகவுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிம்பு, தனது படக்குழுவினர் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியே பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தள்ளது. சிம்பு, ரஜினி மற்றும் அஜித் படங்கள் வெளியானால் முதல்நாளே முதல் காட்சியே பார்த்துவிடும் வழக்கம் உடையவர். அதன்படி, இந்த முறை ரஜினியின் படம் வெளியாகும் நாளில் தனது படக்குழுவினர் அனைவருக்கும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது
No comments:
Post a Comment