சூர்யா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ’24’. அப்பா, மகன்,வில்லன் என 3 வேடங்களில் சூர்யா நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் 3-வது சில்க் ரோடு உலக திரைப்படவிழாவில் மீடியா ஹானர்போட்டி என்ற பிரிவில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.இது குறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ ‘24’ திரைப்படம் நேற்று நடைபெற்ற 3-வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.
பெருமைக்குரிய இந்த திரைப்பட விழாவில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நிர்வாக அதிகாரி ராஜசேகரபாண்டியன் கலந்து கொண்டார். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இது தான். இதை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகவும், எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் நாங்கள் கருதுகிறோம்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment