விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்திசண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் வடிவேலு காமெடியனாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். மேலும், சூரியும் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதைத் தொடர்நது தற்போது மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இப்படத்தில் நடிக்கும் விஷால், தமன்னா, சௌந்தர்ராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வந்தனர். அப்போது, அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment