‘நான் கடவுள்’ படத்தின் மூலம் இயக்குனர் பாலாவால் வில்லனாக அறிமுகமானவர்தான் மொட்டை ராஜேந்திரன். அதன்பிறகு, ஒருசில படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக நடித்து வந்தவரை, அட்லி தனது ‘ராஜாராணி’ படத்தின் மூலம் காமெடியனாக்கிவிட்டார்.
அந்த படத்திலிருந்து தற்போது வரை அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்பவர்களைவிட, காமெடியனாக ஒப்பந்தம் செய்பவர்கள்தான் அதிகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய காமெடிக்காகவே ஓடியது என்றால் அது மிகையாகாது.
அஜித், விஜய் என முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன் தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சிம்பு நடிக்கும் படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் அண்ணன் மாரி மணி என்பவரும் இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே, மஹத், ஸ்ரேயா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment