சூர்யா நடித்துள்ள 24 படத்தை இயக்கியிருக்கும் விக்ரம் குமார் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார்.
விக்ரம் குமாரின் முதல் படம், யாவரும் நலம். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ஒரு த்ரில்லர் படத்தை தொடங்கினார்.
கதை விஷயத்தில் விக்ரம், விக்ரம் குமாருக்கு இடையில் மோதல் ஏற்பட, தெலுங்குக்கு சென்றார் விக்ரம் குமார். அங்கு சில படங்கள் இயக்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய படம்தான் 24.
இந்தப் படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக விக்ரம் குமார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment