Thursday 29 September 2016

விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்

திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில், சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் நடித்த ‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்தும், திருட்டு விசிடிகளாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.
பல கோடி முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விற்கும் திருட்டு விசிடி பிரச்சினைகளால் திரைப்பட தொழிலே நசிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்சினையை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம். எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படைமாக இப்படங்கள் இருந்தபோதிலும் திரையுலகின் பிரச்சினையான இதை பொதுநலன் கருதி இப்பிரச்சினை மீது உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு இணையதள ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்களின் உதவியோடு தடுப்பதோடு திருட்டு விசிடியாக விற்பனை செய்வதை தடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். திருட்டு விசிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள இந்த முயற்சியை அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மேற்கொண்டால் திருட்டு விசிடியை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்று கூறியுள்ளார்

அஜித் படத்துக்கு வில்லன் ரெடி

அஜித் படங்களின் நடிகர், நடிகையர்களின் விவரங்கள் ரொம்பவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும். இருப்பினும், அவர் படத்தில் நடிப்பவர்களுடைய விவரங்கள் எப்படியாவது வெளியே வந்துவிடுகின்றன. அஜித் தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவா படத்திற்கு முதலில் யார் ஹீரோயின் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.
காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பது அரசல் புரசலாக பேச்சு அடிபடவே, இறுதியில், படக்குழுவினரே காஜல் அகர்வால்தான் ஹீரோயின் என்பதை உறுதி செய்தனர். அதன்படி, தற்போது அஜித் படத்தின் வில்லன் தேடுதல் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடைசியில், ஒரு பாலிவுட் நடிகர் ஒருவரை இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசர் வெளியாகும்போது அந்த வில்லனை அறிமுகப்படுத்தலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரசன்னா, அரவிந்த்சாமி ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.201609281258440591_what-wrong-for-celebrate-sivakarthikeyan-vijay-sethupathi_secvpf
இப்படம் வெளியாகும் தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படமும் வெளியாகவிருக்கிறது. இவ்விரு படங்களும் போட்டியாக களமிறங்கும் நேரத்தில் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ ஸ்டைலில் ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு போஸ் கொடுத்து அவரை கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து விஜய் சேதுபதி பேசும்போது, ‘றெக்க’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்டைலான போஸ் ஒன்றை கொடுத்திருப்பேன். இப்படியொரு காட்சியை இயக்குனரிடம் வைக்க சொன்னது நான்தான்.
எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் எல்லாரையும் நிறைய பேர் கொண்டாடிவிட்டார்கள். என் சமகாலத்தில் எனக்கு போட்டி என்று கூறப்படும் சிவகார்த்திகேயன் படத்தை கொண்டாடுவதில் என்ன தப்பு? அதில் எனக்கு சந்தோஷமே. எந்த வருத்தமும் இல்லை. ‘ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும். இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என்று பேசினார்.

Tuesday 27 September 2016

மீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா

மீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா

சமீபகாலமாக ரஜினி படத்தின் தலைப்பை வைத்து கோலிவுட்டில் புதிய சினிமாக்கள் உருவாகி வருகின்றன. அப்படி, ரஜினி படத்தலைப்பை வைத்து உருவாகும் சினிமாக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
இதனால், தற்போது தமிழ் சினிமாவில் ரஜினியின் பழைய படங்களின் தலைப்பை வைப்பது டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், தற்போது கிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ரஜினி படத் தலைப்பான ‘வீரா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் ‘வீரா’ படம் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது. மீனா, ரோஜா ஆகியோர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். தற்போது கிருஷ்ணா நடிக்கும் ‘வீரா’ படத்தை ராஜாராம் இயக்கவிருக்கிறார்.
கிருஷ்ணாவுடன் கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஏற்கெனவே, கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கழுகு’ படம், 1981-ல் முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்கூடவே நடித்தவர் அப்புக்குட்டி. இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித கப்பல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது. அஜித்தை பற்றி ஒவ்வொரு முறையும் அப்புக்குட்டி புகழ்ந்து வந்தாலும், தற்போது அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அப்புக்குட்டி பீல் பண்ணும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்துள்ளது.
அதாவது, அப்புக்குட்டிக்காக தனியாக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி அவரது கெட்டப்பையே மாற்றியவர் அஜித்தான். அந்த போட்டோ ஷுட்டிற்கு பிறகு அப்புக்குட்டி இப்போது ஹீரோவாக நடிக்கும் ‘காகித கப்பல்’ ஆடியோ விழா நடந்த சமயத்தில் அஜித் அவருக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லியுள்ளார்.
மிகப்பெரிய ஸ்டாரான அஜித், அப்புக்குட்டியை வாழ்த்தியது ரொம்ப பெருமையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாம். அவர் இப்படி வாழ்த்து சொல்வாருன்னு அப்புக்குட்டி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லையாம்.
இப்படத்தில் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும்படி ஒரு பாடல் வைத்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல், அப்புக்குட்டிக்கு டூயர் பாடல் ஒன்று உள்ளதாம். அதில் அப்புக்குட்டி நடனம் ஆடி அசத்தியிருக்கிறாராம்.

Saturday 24 September 2016

சீனாவின் உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24

சூர்யா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ’24’. அப்பா, மகன்,வில்லன் என 3 வேடங்களில் சூர்யா நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் 3-வது சில்க் ரோடு உலக திரைப்படவிழாவில் மீடியா ஹானர்போட்டி என்ற பிரிவில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.இது குறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ ‘24’ திரைப்படம் நேற்று நடைபெற்ற 3-வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.
பெருமைக்குரிய இந்த திரைப்பட விழாவில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நிர்வாக அதிகாரி ராஜசேகரபாண்டியன் கலந்து கொண்டார். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இது தான். இதை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகவும், எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் நாங்கள் கருதுகிறோம்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது

சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும் நடித்து வருகின்றனர். 3-வது நாயகி தேடும் படலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவின் முதல் கெட்டப்பான ‘மதுர மைக்கேல்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிம்புவின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி, அஸ்வின் தாத்தா என்ற 60 வயது முதியவராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு முதியவராக நடித்ததில்லை என்பதால் இந்த கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday 23 September 2016

தொடரி – திரை விமர்சனம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ்.
பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.
இந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த பிரச்சினையில் தனுஷின் காதலியான கீர்த்தி சுரேஷை கொன்றுவிடுவதாக ஹரிஷ் உத்தமன் மிரட்ட, பயந்துபோய் கீர்த்தி சுரேஷ் ரெயில் என்ஜின் அறையில் பதுங்கிக் கொள்கிறார்.
தனுஷையும் ஒரு அறையில் போட்டு பூட்ட, அங்கிருந்து தனுஷ் தப்பித்து கீர்த்தி சுரேஷை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். இந்நிலையில், ரெயில் என்ஜின் டிரைவர் திடீரென இறந்துபோக, ரெயில் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக செல்கிறது.
ரெயிலை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக மீடியாவில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்க, தனுஷோ தனது காதலியை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். ரெயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்குகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தினார்களா? தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
கேண்டீன் ஊழியராக தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுக்க ரெயிலுக்குள்ளேயே நடப்பதால் இவரது நடிப்புக்கு ஏற்ற தீனி இந்த படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே உடையணிந்து வந்தாலும், காட்சிக்கு காட்சி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். படத்தில் முதல்பாதி முழுக்க தனுஷுடன் டூயட் பாடுவது, ரொமான்ஸ் பண்ணுவது என வரும் இவர், இடைவேளைக்கு பிறகு ரெயில் என்ஜினில் இவரது கதாபாத்திரத்தை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.
பிரபு சாலமன் படங்களில் எப்போதும் தம்பிராமையாவின் காமெடிக்கு தனி மவுசு இருக்கும். ஆனால், இந்த படத்தில் தம்பி ராமையாவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடிக்கு கூடவே கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் காமெடி ரசிக்கும்படி இல்லை.
மந்திரியாக வரும் ராதாரவி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கருப்பு பூனை படைவீரராக வரும் ஹரிஷ் உத்தமன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லன் என்றால் ரசிகர்கள் வெறுக்கும்படியாக இருக்கவேண்டும். அவ்வாறே இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.
மற்றபடி, ரெயில்வே போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், என்ஜின் டிரைவராக வரும் ஆர்.வி.உதயகுமார், டிக்கெட் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, டிவியில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களாக வந்தாலும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் பிரபு சாலமன், பயணத்தை மையமாக வைத்து தனது வழக்கமான பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு படத்தை முழுக்க ரெயிலில் எடுக்கமுடியுமா? என்பதற்கு சவால் விடும்படியாக இவரது படைப்பு உள்ளது.
படத்தின் இடைவேளைக்கு சற்று முன்னர்தான் கதையே ஆரம்பிக்கிறது. ஆகையால், படத்தின் முதல் பாதி காமெடி, காதல் என இழுஇழுவென கதையை இழுத்திருக்கிறார்.
இடைவேளைக்கு பிறகு ரெயிலைப்போன்று கதையும் வேகமெடுக்கிறது. முதல்பாதியை குறைத்திருந்தால் படம் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும்.
அதேபோல், பிரபு சாலமன் படங்களில் இயற்கை காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் இயற்கை காட்சிகளை வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.
பின்னணி இசையில் வேகம் கூட்டியிருக்கலாம். படத்தில் ‘போன உசுரு வந்துடுச்சே’ பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், அதன் பின்னணியை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க விடாமல் செய்துவிட்டது.
மொத்தத்தில் ‘தொடரி’ வேகமில்லா பயணம்

விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்

விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்

விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், விஜய் ராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
201609231622190867_vijay-acting-bairavaa-movie-intresting-news_secvpf
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படம் பற்றிய பலருக்கும் தெரியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
‘பைரவா’ படத்தின் கதை கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறதாம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பாப்ரி கோஷ் நடிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் பரிந்துரை செய்தாராம். பாப்ரி கோஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பைரவா’ படத்தில் எக்காரணத்தை கொண்டும் பஞ்ச் டயலாக் இருக்கக்கூடாது என்று இயக்குனரிடம் விஜய் கேட்டுக் கொண்டாராம். அதேநேரத்தில் ஒவ்வொரு வசனமும் பவர் புல்லாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
இப்படத்தில் விஜய் கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
மற்ற படங்களைப் போலவே விஜய் இந்த படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளார். அந்த பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்யவுள்ளனர்.
கபாலி படத்தில் நடித்த ‘மைம்’ கோபி இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Tuesday 20 September 2016

திருமணம் ஆன தெலுங்கு பட அதிபருடன் அனுஷ்கா காதல்?

திருமணம் ஆன தெலுங்கு பட அதிபருடன் அனுஷ்கா காதல்?

அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ‘பாகுபலி-2’ படத்துக்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அனுஷ்கா ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவரையே திருமணம்செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அனுஷ்கா கதாநாயகியாக நடித்த படம் ஒன்றை இந்த பெரிய தயாரிப்பாளர் தயாரித்தார். அப்போது தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறிவிட்டது என்று தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தயாரிப்பாளர் திருமணமானவர். வேகமாக பரவிவரும் இந்த தகவலை அனுஷ்கா இதுவரை மறுக்கவில்லை.
ஏற்கனவே அனுஷ்காவுக்கும் மூத்த தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் காதல் என்று கூறப்பட்டது. பின்னர் தெலுங்கு வாரிசு நடிகருடனும், இயக்குனர் ஒருவருடனும் அனுஷ்காவை இணைத்து பேசினார்கள். இப்போது தெலுங்கு பட தயாரிப்பாளருடன் சேர்த்து இருக்கிறார்கள்.
இவர் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்தவர். இது உண்மையா? பரப்பிவிடப்பட்ட புரளியா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

தனுஷுடன் மோதும் விஜய் சேதுபத


தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ படம் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனுடன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆண்டவன் கட்டளை’ படமும் வெளியாகவுள்ளது. ஆனால், ‘தொடரி’ படம் வெளியான மறுநாள் செப் 23-ந் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நாசர், சிங்கம் புலி, நமோ நாரயணா, பூஜா தேவரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது “சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை” நடிகை அனுஷ்கா சொல்கிறார்

“சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது.
எனவே பெண்கள் நடிக்201609190330075406_women-do-not-need-to-be-afraid-to-act-in-films-actress_secvpfக வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.
அதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன்.
கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.
நான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.
புதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
நல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன. என் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன்.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

தனுஷூடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங்

ரித்திகா சிங் பத்திரிகை நிருபராகவும், கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடும் இளைஞனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ”ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன்.
இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. படப்பிடிப்பில் மற்றவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல எனக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருக்கிறார்.
விரைவில் தமிழ்பேச கற்றுக்கொள்வேன். முதல் படத்தில் தேசிய விருது கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இனி எந்த வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.
தமிழில் தனுஷ் பிடிக்கும். அவரு201609191921287240_i-wish-to-act-with-dhanush-says-ritika-singh_secvpfடன் நடிக்க ஆசை. நான் ஜோதிகாவின் ரசிகை. அவரது நடிப்யை மிகவும் ரசிப்பேன். தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு படம் தான் நடித்திருக்கிறேன்.
என்றாலும் என்னை மிகவும் பாராட்டுகிறார்கள். முகத்தில் காயம்பட்டால் படத்தில் நடிப்பதை பாதிக்கும் என்பதால் இப்போது பாக்சிங் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மிகவும் உதவினார். நடிப்புதிறமையை கற்று வருகிறேன். படப்பிடிப்பில் இயக்குனர் சொல்வதை செய்கிறேன். அடுத்து பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கிறேன். தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...