Monday 15 August 2016

விஜய், ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க ஆசை: விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இருமுகன்’. இப்படத்தில் இரு வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். படங்களில் வித்தியாச வேடமேற்று நடித்திருக்கும் இவருக்குள்ளும் ஒரு இயக்குனர் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார்.

சென்னை பெருவெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு பாடலாக உருவாக்கி, அந்த பாடலில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார் விக்ரம். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது அவருக்கும் படத்தை இயக்கும் ஆசை துளிர்விட்டுள்ளது.

அவர் அப்படி படம் இயக்குவதென்றால், விஜய் அல்லது ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். விக்ரம் தனது மகன் துருவ்வை வைத்து படம் இயக்க ஆசை இருந்தாலும், அவன் இன்னும் அதற்கு தயாராகததால் இப்போதைக்கு இந்த முடிவு என்று கூறியுள்ளார். விக்ரமின் இந்த ஆசையை விஜய்யும், ஜெயம் ரவியும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

பாகுபலி-2 படத்தை வெளியிடும் புதிய தயாரிப்பு நிறுவனம்

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள ‘பாகுபலி – 2’ படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கே.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே வெளியிடுகிறது.
‘பாகுபலி’ படத்தின் முதல்பாகத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தை புதிதாக தொடங்கப்பட்ட கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.201608140959212561_baahubali-2-release-new-production-company_SECVPF
‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுவது மட்டுமல்லாது ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிப்பில் உருவாகும் ‘மடை திறந்து’ என்ற படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கிறது.
இப்படத்தை சத்யசிவா இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழில் ‘மடைதிறந்து’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘1945’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது

மதுரை மீனாட்சியம்மன் கோவில் விஷால்-தமன்னா தரிசனம்


விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்திசண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் வடிவேலு காமெடியனாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். மேலும், சூரியும் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதைத் தொடர்நது தற்போது மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இப்படத்தில் நடிக்கும் விஷால், தமன்னா, சௌந்தர்ராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வந்தனர். அப்போது, அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
201608141411139526_Vishal-Tamannah-dharshan-in-Madurai-Meenakshi-Amman-Temple_SECVPF

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...