Friday 27 January 2017

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதையா? புதிய தகவல்

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் ஒருசில காட்சிகளை 80-களில் நடப்பதுபோன்று காட்சிப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காகத்தான் விஜய் தற்போது தாடி, முறுக்கு மீசையுடன் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. 80-களில் நடக்கும் காட்சிகளை மதுரையில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வான நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்கப் போவதாகவும், அதைத் தொடர்ந்து பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Thursday 26 January 2017

மீண்டும் தள்ளிப்போன `சி3': முன்னதாக ரிலீசாகும் ஜெயம் ரவியின் `போகன்'

சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள `சி3' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில் `போகன்' படம் முன்னதாக ரிலீஸ் ஆக உள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.

சூர்யா நடிப்பில் தற்போது ‘சி-3’ படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வந்தது. மேலும் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்கு மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது பிப்ரவரி 9-ம் தேதி படம் வெளியாகும் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சூர்யாவின் `சி-3' படம் தள்ளிப்போனதால், லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி நடித்துள்ள `போகன்' படத்தை பிப்ரவரி 2-ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக `போகன்' பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் -பிரணிதா நடித்துள்ள ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படமும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday 4 January 2017

5 மில்லியனைக் கடந்தது விஜய்யின் ‘பைரவா’ டிரெய்லர்

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் தற்போது 50,62,677 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...